கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.என்.ஹரிபிரசாத், காதிரசப் குலேதகுமா, ஸ்ரீலட்சுமி வகோடா, ராமகிருஷ்ணா நாயக் முத்துகுரி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழுவின் ஓவியக் கண்காட்சி புதுச்சேரி ஆரோதன் ஆர்ட் கேலரியில் அண்மையில் தொடங்கியது. இதை புதுவை முதல்வர் தொடக்கிவைத்தார்.
தில்லி லலித்கலா அகாதெமியின் முன்னாள் தலைவர் சி.எஸ்.கிருஷ்ணா செட்டி முன்னிலை வகித்தார். இதில், புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.இளையராஜா, லலித்கலா அகாதெமி முன்னாள் உறுப்பினர் எஸ்.ஷட்ஜ், ஆரோதன் ஆர்ட் கேலரி நிறுவனர் லலித் வர்மா, கலைமாமணி விருது பெற்ற கே.எம்.சரவணன், புதுச்சேரி ஓவியர்கள் ராஜேந்திரன், முனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று, ஓவியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.