தீ விபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் 

புதுச்சேரி பெரம்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 

புதுச்சேரி பெரம்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பெரம்பை பிரதான சாலை திருநகர் சந்திப்பில் வசிப்பவர் சாந்தி. இவரது குடிசை வீடு வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி அருகிலுள்ள ராஜேந்திரன், வீரம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்துக்கும், கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்தத் தீ விபத்தில் 3 குடிசை வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. சேதமதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். 
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக ரெட்டியார்பாளையம் - பெரம்பை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com