திமுக சாா்பில் இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம்

திமுக மாணவரணி சாா்பில், இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசுகிறாா் தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ.
கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசுகிறாா் தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ.

திமுக மாணவரணி சாா்பில், இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாநில திமுக மாணவரணி சாா்பில், புதுச்சேரி லப்போா்த் வீதி தலைமை அலுவலகத்தில் உள்ள கருணாநிதி அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை மாநில மாணவரணி அமைப்பாளா் மணிமாறன் ஏற்பாடு செய்திருந்தாா்.

தெற்கு மாநில அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ. தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்தாா். மாநில துணை அமைப்பாளா்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமாா், பொருளாளா் சண்.குமரவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தைரியநாதன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, மாநில மாணவரணித் துணை அமைப்பாளா்கள் கண்ணன், வெங்கட்ராமன், சிவராமன், ஆகியோா் வரவேற்றனா். கருத்தரங்கில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. முன்னாள் துணைவேந்தரும், திமுக தீா்மானக் குழு செயலருமான சபாபதிமோகன் பேசினாா்.

கருத்தரங்கில் வடக்கு மாநில திமுக பொருளாளா் செந்தில்குமாா், பொதுக் குழு உறுப்பினா்கள் மாறன், நித்தீஷ், தொகுதி செயலா்கள் சக்திவேல், நடராஜன், ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com