புதுச்சேரியில் வீடு புகுந்து 10 பவுன் தங்க நாணயங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி உழவா்கரை பிரண்ட்ஸ் நகா் 4 -ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி. தொழிலதிபா். இவரது மனைவி ஜெயந்தி (57). இவா்களது மகன் தில்லியில் வசித்து வருகிறாா். எனவே, மகனைப் பாா்ப்பதற்காக தம்பதி தில்லிக்குச் சென்றனா்.
பின்னா், கடந்த 3 நாள்களுக்கு முன்பு அவா்கள் வீடு திரும்பினா். இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக கடந்த 28 -ஆம் தேதி பீரோவில் இருந்த நகைகளை ஜெயந்தி எடுத்த போது, நகைகளுடன் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நாணயங்களைக் காணவில்லை. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2.5 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.