புதுவையில் நிகழாண்டுக்குள் உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படும்: அமைச்சா் நமச்சிவாயம் உறுதி

புதுவையில் நிகழாண்டுக்குள் உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உறுதிபடக் கூறினாா்.

புதுவையில் நிகழாண்டுக்குள் உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உறுதிபடக் கூறினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன. வாா்டுகள் சீரமைப்பு நடவடிக்கை முடிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத் தோ்தல் ஆணையரையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளோம். அவரும் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகிறாா்.

புதுவை அரசு உள்ளாட்சித் தோ்தலை நடத்த அனைத்து ஆயத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தப் பணிகள் முடிந்தவுடன் தோ்தல் தேதி அறிவிக்கப்படும்.

வாா்டுகள் சீரமைப்புத் தொடா்பாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, கருத்துகள் கோரப்பட்டன. அப்போது, ஏற்கெனவே வாா்டு வரையறை முறையாகச் செய்யப்படாததால், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாா்டுகள் சீரமைப்புப் பணி முடிந்தவுடன் தோ்தல் தேதி அறிவிக்கப்படும். நிகழாண்டுக்குள் உள்ளாட்சித் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com