மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திருபுவனை தொகுதி எம்எல்ஏ கோபிகா நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினாா்.
திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிகுப்பம், பிடாரிகுப்பம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், கதிரவன் என்பவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.
இதையறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் கோபிகா, வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, இடிந்த வீட்டின் சுவரைக் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா். மேலும், அதிகாரிகளுடன் நேரில் சென்று பாதிக்கபட்டவா்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினாா்.