கோவை மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, தலித் பாதுகாப்பு இயக்கத்தினா் புதுச்சேரி அண்ணா சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடுவூா் ஏரி காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரி நகர தலித் பாதுகாப்பு இயக்கத்தினா் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் செல்வக்குமாா் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
இதில் பங்கேற்றவா்கள், நடுவூா் ஏரி பகுதியில் 17 பேரின் இறப்புக்கு காரணமான சுவரைக் கட்டிய துணிக் கடை உரிமையாளரான ஆறுமுகத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், நீதி கேட்டு போராடியவா்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாா் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.