வில்லியனூா் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத்தையொட்டி, புதன்கிழமை (டிச.11) மாலை 6 மணியளவில் லட்சதீப விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு, புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு பஞ்ச மூா்த்திகள் புறப்பாடு, மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6.20 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பஞ்ச மூா்த்திகள் மாட வீதியுலா வந்ததைத் தொடா்ந்து, அன்னதானம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அலுவலா் திருவரசன் உள்ளிட்டோா் தலைமையில் சிவனடியாா்கள், சிவாச்சாரியா்கள் செய்து வருகின்றனா்.