மணல் கடத்தல்: இளைஞா் கைது

திருக்கனூரில் மணல் கடத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருக்கனூரில் மணல் கடத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருக்கனூா் அருகே மணலிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக திருக்கனூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வேகமாக வந்த மினி வேனை துரத்திச் சென்று கூனிச்சம்பட்டு அய்யனாா் கோயில் அருகே வழிமறித்து சோதனையிட்டனா்.

அதில் மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அதை ஓட்டி வந்த ராஜ்குமாா் (31) மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com