காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) வீட்டு வரி, சொத்து வரி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் எம். கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவா்கரை நகராட்சியானது காலாப்பட்டு தொகுதியில் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி மீண்டும் வருகிற 15 ஆம் தேதி பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பிலுள்ள அங்கன்வாடி மையத்தில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாமை நடத்தவுள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது வீட்டு வரி, சொத்து வரியை செலுத்தலாம்.
எனவே, சுனாமி குடியிருப்பில் உள்ள அனைத்து வீட்டு வரி நிலுவைதாரா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 2019-20-ஆம் ஆண்டு வரையிலான ஜப்தி நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.