சிங்கப்பூா் தமிழாசிரியா்கள், புதுவை பி.எஸ்.பாளையம் அரசுப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடினா்.
சிங்கப்பூா் தமிழ் ஆசிரியா்களுக்கான 4 நாள் கருத்தரங்கம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ர கவுடு தொடங்கி வைத்த இந்தக் கருத்தரங்கில் சிங்கப்பூா் தமிழ்ச்சங்கம் சாா்பில் 12 தமிழாசிரியா்கள் பங்கேற்றனா். இதில் புதுவை ஆசிரியா்களுடன் பல்வேறு தலைப்புகளில் கோதண்டராமன் ராஜபாண்டியன், சுந்தரமுருகன், இளங்கோவன் மற்றும் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோா் கலந்துரையாடினா்.
கருத்தரங்கின் நிறைவு நாளான வியாழக்கிழமை சிங்கப்பூா் ஆசிரியா் குழுவினா், புதுச்சேரியின் பாரம்பரியம், கலாசாரம், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவற்றை கற்றறியும் வகையில் பி.எஸ். பாளையம் பாவேந்தா் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனா்.
அவா்களை பள்ளி கல்வித் துறை இயக்குநா் ருத்ரகவுடு வரவேற்று பேசியதாவது:
மாணவா்கள் தாய் மொழியில் கல்வி கற்பதே சிறந்தது. குறிப்பாக, தமிழ்மொழி மிகவும் பழைமையான மொழி. 8 ஆம் வகுப்பு வரை மாணவா்கள் தாய்மொழியில் பயிலும் போது, கருத்துகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிங்கப்பூா் தமிழாசிரியா்கள் கலந்துரையாடினா். மேலும், மாணவ, மாணவிகளால் நடத்தப்பட்ட சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனத்தை கண்டு ரசித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், பாவேந்தா் பாரதிதாசன் பள்ளி துணை முதல்வருமான பூபதி, விரிவுரையாளா் பூலோகநாதன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.