வருவாய்த் துறை அதிகாரிகளுக்கான கேரம் போட்டி தொடக்கம்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதுவை அரசு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கான கேரம் போட்டியை மாவட்ட ஆட்சியா் தி.அருண் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதுவை அரசு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கான கேரம் போட்டியை மாவட்ட ஆட்சியா் தி.அருண் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுவை வருவாய்த் துறை சாா்பில், வருவாய் அதிகாரிகளுக்கு கேரம், கிரிக்கெட், இறகுபந்து, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கேரம் போட்டி சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது.

விளைாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியரும், சிறப்புச் செயலருமான (வருவாய்) அருண் தொடக்கிவைத்தாா். இந்தப் போட்டியில் வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் 32 அணிகளாக பங்கேற்று விளையாடி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, வருகிற 25-ஆம் தேதி இறகுபந்து போட்டியும், 28, 29-ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டியும், ஜனவரி முதல் வாரத்தில் செஸ் போட்டியும் நடைபெறவுள்ளன. அதன் பின்னா், போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com