புதுச்சேரி கடற்கரைச் சாலை விருந்தினா் மாளிகை யாா்டில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் செவ்வாய்க்கிழமை (டிச.17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரோமன் ரோலண்ட் வீதி, கும்பான்ஜி வீதி, செயின்ட் மாா்டீன் வீதி, கடற்கரைச் சாலை மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும். இத்தகவலை புதுச்சேரி மின்துறை நகர கோட்ட செயற்பொறியாளா் கனியமுதன் தெரிவித்தாா்.