பிஎஸ்என்எல் ஊழியர்கள் 3 நாள்கள் வேலைநிறுத்தம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏ. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
4 ஜி அலைக்கற்றை சேவையினை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும், 3-ஆவது ஊதிய உயர்வு மாற்றத்தை 
உடனே வழங்கிட வேண்டும், அனைத்து பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கும் 1-1-2017 முதல் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, வரும் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதன்படி, புதுவை மாநிலத்திலும் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com