பிஎஸ்என்எல் கட்டணப் பாக்கி வைத்திருப்போர் கவனத்துக்கு...

பிஎஸ்என்எல் கட்டணப் பாக்கி வைத்துள்ளோர் சமரச அடிப்படையில் கட்டணத்தை செலுத்த வரும் 15-ஆம் தேதி மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.

பிஎஸ்என்எல் கட்டணப் பாக்கி வைத்துள்ளோர் சமரச அடிப்படையில் கட்டணத்தை செலுத்த வரும் 15-ஆம் தேதி மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.
பிஎஸ்என்எல் தொலைபேசி, செல்பேசியை பயன்படுத்தி கட்டணப் பாக்கி வைத்துள்ள புதுச்சேரி பகுதி பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவின் சார்பில் வரும் வரும்  15-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
புதுவை மாநில நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதம் பெற்றவர்கள் வரும் 15-ஆம் தேதி முன்பே பிஎஸ்என்எல் மையங்களில் பணம் செலுத்தினால், நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்க்கலாம் என பிஎஸ்என்எல் புதுச்சேரி தொலைதொடர்பு மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com