சங்கு ஊதும் போராட்டம் நடத்திய காங்கிரஸார்

புதுவை ஆளுநர் மாளிகை அருகே காங்கிரஸ் தொண்டர்கள் சங்கு ஊதியும்,  ஒப்பாரி வைத்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

புதுவை ஆளுநர் மாளிகை அருகே காங்கிரஸ் தொண்டர்கள் சங்கு ஊதியும்,  ஒப்பாரி வைத்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை முன் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அருகில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்அனுமதிக்கப்படவில்லை.
இரும்புத் தடுப்புகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதுடன்,  அவர் வெளியேற வலியுறுத்தி சங்கு ஊதும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
மகளிர் காங்கிரஸார் ஆளுநர் கிரண் பேடியை வெளியேற வலியுறுத்தி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com