புதுச்சேரி விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்து காவலர் காயம்

புதுச்சேரி விமான நிலையத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததில், அவர் காயமடைந்தார்.


புதுச்சேரி விமான நிலையத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததில், அவர் காயமடைந்தார்.
புதுச்சேரி விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அப்துல் அமீத் குரஷி துப்பாக்கியை நிற்க வைத்த நிலையில் துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கைவிரல் துப்பாக்கி விசையில் பட்டு வெடித்தது.
இதனால், துப்பாக்கியில் இருந்த ஒரு குண்டு பாய்ந்ததில் அவரது வலது கை ஆள்காட்டி விரல், கட்டை விரல் சிதைந்தது. அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அப்துல் அமீத் குரஷியை மீட்டு, கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்ததால், அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்தனர். விமான நிலைய அதிகாரிகள் சம்பவத்தை எடுத்துக் கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் நிம்மதியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com