மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விரைவில் பூரண உடல் நலம்பெறுவார் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், சுட்டுரையில் வியாழக்கிழமை காலை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவர் விரைவில் குணம் பெறுவார். எதிர்
வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையையும் அவர் தாக்கல் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என அதில் தெரிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.