புதுச்சேரியில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 38 போலீஸார் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
புதுச்சேரி சிறப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் புனிதராஜ், பெரியக்கடை காவல் நிலையத்துக்கும், மங்கலம் காவல் நிலையத் துணைக் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, புதுச்சேரி ஆயுதக் கிடங்கு - பயிற்சி நிலைய (பிஏபி, பிடிஎஸ்) பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல, 15 தலைமைக் காவலர்கள், காவலர்கள் உள்பட 38 பேர் புதுவையின் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை புதுவை காவல் துறை தலைமையக எஸ்.பி. கொண்டா வெங்கடேஷ்வர ராவ் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.