புதுவையில் ஜன. 31-ஆம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக புதுவை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1.1.2019-அன்றை தகுதி பெறும் தேதியாகக் கொண்டு புதுவை ஒன்றிய ஆட்சிப் பரப்புக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின்
2019-ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்கு முறை திருத்தப் பணியின்
வாக்காளர் இறுதிப் பட்டியலை ஜன. 21-ஆம் தேதி வெளியிடும்படி மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது, இரட்டைப் பதிவுகளை நீக்கி தகுதியான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான காலக் கெடுவை மத்தியத் தேர்தல் ஆணையம் ஜன. 31-ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.
அதன்படி, வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜன. 31-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் பட்டியல் பிப். 6-ஆம் தேதி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
மேலும், தேர்தல் துறையின் ttps/ceo puducherry.Py.gov.in என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.
வாக்காளர் இதைப் பார்வையிட்டு, தங்களது திருத்தங்கள் சரியாக உள்ளதாக எனத் தெரிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.