பொங்கல் விழா கிரிக்கெட் போட்டி

பொங்கல் விழாவையொட்டி, புதுச்சேரியில் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பொங்கல் விழாவையொட்டி, புதுச்சேரியில் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உள்பட்ட  ரெயின்போ நகர் 4-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள மைதானத்தில் ரெயின்போ நகர் இளைஞர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் போட்டியை சட்டப்பேரவைத் தலைவர் வெ. வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். சிறப்பு  அழைப்பாளராக உழவர்கரை நகராட்சி ஆணையர்  கந்தசாமி,  பெரியகடை காவல் நிலைய ஆய்வாளர் மோகன்குமார், காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல், சட்டப்பேரவைத் தலைவரின் தனி உதவியாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறகிறது. போட்டியில் வெற்றி பெறும்  முதல் மூன்று அணிகளுக்கு அப்போது பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com