ரெளடிகளின் மிரட்டலைத் தடுக்க தொழிலதிபர்களுடன் போலீஸார் ஆலோசனை

ரெளடிகளின் மிரட்டலைத் தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை பகுதியில் 

ரெளடிகளின் மிரட்டலைத் தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை பகுதியில் தொழிலதிபர்களுடன் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி வடக்கு எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், காவல் உதவி ஆய்வாளர் இனியன் மற்றும் தொழிலதிபர்கள், தொழில்சாலைகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர்களிடம் குறைகளைக் கேட்ட எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன், அனைத்து தொழில்சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், தேவையான மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தவும், பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் அறிவுறுத்தினார்.மேலும், ரெளடிகள் மாமூல் கேட்டு மிரட்டல் அல்லது ஏதேனும் பிரச்னையில் ஈடுபட்டால் காவல் துறையிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என்றும், இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com