லாட்டரி சீட்டு விற்றவர் கைது

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் ஆட்டுப்பட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் செல்லிடப்பேசியுடன் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறிவே, அவரது செல்லிடப்பேசியை வாங்கி சோதனையிட்டனர். இதில் அவர், இணையதளம் மூலம் வெளிமாநில போலி லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர், கொம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (48) என்பதும், இணையதளம் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com