பளு தூக்குதலில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பாராட்டு

பளு தூக்குதல் போட்டியில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற புதுவை வீரர்களை முதல்வர் வே.நாராயணசாமி பாராட்டினார்.

பளு தூக்குதல் போட்டியில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற புதுவை வீரர்களை முதல்வர் வே.நாராயணசாமி பாராட்டினார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் புதுவை சார்பில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், சப் - ஜூனியர் 74 கிலோ எடைப் பிரிவில் புதுவை 
மூ.தருண்ராஜ் தங்கப்பதக்கம் வென்றார். சப் ஜூனியர் 50 கிலோ எடைப் பிரிவில் பா.இளம்பரிதி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
புதுச்சேரி திரும்பிய இவர்கள், புதுவை சட்டப் பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி, சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, நைனார்மண்டபம் டேப்பிரேக்கர் பவர் லிஃடிங் ஜிம் பயிற்சியாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com