புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத குமரேஸ்வரசாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணியளவில் ஏகசால பூஜையுடன் மிக விமரிசையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் வே.நாராயணசாமி, சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, திருப்பணிக் குழு, விழாக் குழு, சிவாச்சாரியர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.