புதுவையில் 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்

புதுவையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 4 சனிக்கிழமைகளில் இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

புதுவையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 4 சனிக்கிழமைகளில் இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
 இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம.குப்புசாமி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
 கடும் வெயில் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாள்கள் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜூலை 6, 20-ஆம் தேதிகள், ஆகஸ்ட் 3, 24-ஆம் தேதிகள் ஆகிய 4 சனிக்கிழமைகளில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com