லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள செல்வகணபதி கோயில் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.
இதில் பெண்கள் திரளாக பங்கேற்று கோலம் போட்டனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை காமராஜ் நகர் கிருஷ்ணா நகர் 12-ஆவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வகணபதி கோயிலின் 8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோலப் போட்டி நடைபெற்றது.
இதில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கோலம் போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் ரங்கோலி, தானியங்களால் ஆன கோலங்கள், சிக்கு கோலங்களை வரைந்தனர்.
போட்டியை செல்வகணபதி ஆலய நிர்வாகத் தலைவர் மு. நாராயணசாமி தொடக்கிவைத்தார். இதில் வெற்றி பெறும் பெண்களுக்கு வரும் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.