அதிமுகவை விமர்சனம் செய்ய புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு தகுதியில்லை என்று சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் கூறினார்.
இதுகுறித்து வியாழக்கிழமை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை முதல்வர் நாராயணசாமி, அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை ஜெயலலிதாவின் ஆவி கூட மன்னிக்காது என்று கூறியுள்ளார். தேர்தலில் தோல்வி பயத்தில் இருக்கும் அவர், அதிமுக கூட்டணி குறித்து குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பேசுவதற்கு முன்பு, தனது கட்சியின் கூட்டணி குறித்து அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக 5 தொகுதிகளில் வென்றது. தற்போது, தமிழகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் பல கட்சிகளை இணைத்து வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளனர்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரûஸ அதிமுக கூட்டணியில் இணைத்துள்ளது. அதிமுக கூட்டணி 100 சதவீத வெற்றி கூட்டணி என்றார் அன்பழகன்.