வரி செலுத்த சிறப்பு முகாம்கள்: உழவர்கரை நகராட்சி அறிவிப்பு

புதுவை உழவர்கரை நகராட்சியில் வரி செலுத்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை உழவர்கரை நகராட்சியில் வரி செலுத்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் எம். கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியில் வரி செலுத்துவோரின் நலன் கருதி மார்ச் 17 ஆம் தேதி ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் ஆலங்குப்பம் வார்டில் உள்ள 2018-19ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி நிலுவையை செலுத்தி, வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். மேலும், வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஜவகர் நகர் தலைமை அலுவலகம், விவிபி நகர் கணினி வரி வசூல் மையம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். 
இது மட்டுமன்றி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோர் p‌r‌o‌p‌e‌r‌t‌y‌t​a‌x.‌p‌u‌d‌u​c‌h‌e‌r‌r‌y.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளம் வழியாகவும், பண அட்டை மூலமாகவும் வரி செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com