புதுவை மாநிலம், சித்தேரி அணைக்கட்டிலிருந்து மணல் திருடி வந்ததாக 5 மாட்டு வண்டிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பாகூர் அருகே சித்தேரி அணைக்கட்டிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு வருவதாக பாகூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இருளன்சந்தை அருகே மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளைத் தடுத்து நிறுத்தினர். இதில் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் தப்பிவிட, ஒருவர் மட்டுமே போலீஸாரிடம் சிக்கினார்.
விசாரணையில் அவர், குட்டியாங்குப்பம் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த ரகு (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார், மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, ரகுவை கைது செய்தனர். மற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.