காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம்

புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு சமூக ஊடகப் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.

புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு சமூக ஊடகப் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.
 இதுகுறித்து பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளம், ஊடகப் பிரிவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலுடன், புதுவை காங்கிரஸ் சார்பில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 அதன்படி, தெற்கு மாவட்டத் தலைவராக கே.அசோக்குமார், வடக்கு மாவட்டத் தலைவராக சிறில் அந்தோணி, மத்திய மாவட்டத் தலைவராக எஸ்.இளம்பிரியன், காரைக்கால் மாவட்டத் தலைவராக ஆர்.முருகபூபதி, தொகுதித் தலைவர்களாக எம்.ஆனந்தன் (மண்ணாடிப்பட்டு), ஆர்.ராஜாராம் (திருபுவனை), ஆர்.ரஜேஷ் (ஊசுடு), எம்.விநாயகமூர்த்தி (மங்களம்), ஏ.ஷாஜகான் (வில்லியனூர்), எத்தியன்போஸ் (கதிர்காமம்), பி.ஸ்ரீதரன் (இந்திரா நகர்), வி.வெங்கடகிருஷ்ணன் (தட்டாஞ்சாவடி), கே.ஆர். லோகேஸ்வரன் (லாசுப்பேட்டை), வி.விஜயபிரதாப் (காலாப்பேட்டை), சி.பி.ஜோஸ் (முத்தியால்பேட்டை), ஆர்.செல்வக்குமாரன் (ராஜ்பவன்), கே.சரவணன் (உருளையன்பேட்டை), டி.இருதயராஜ் (நெல்லித்தோப்பு), செந்தில்குமரன் (மணவெளி), டி.புஷ்பராஜ் (ஏம்பலம்), டி.சக்திவேல் (நெட்டப்பாக்கம்), கே.முத்துசாமி (பாகூர்), முகம்மது முபாஷ் (மாஹே), ஷேக் அப்துல் பையபாணி (ஏனாம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் நமச்சிவாயம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com