தட்டாஞ்சாவடி தொகுதிக்கு திமுக தேர்தல் பணிக் குழு நிர்வாகிகள் நியமனம்

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
 புதுவை மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் திமுக சார்பில் 7 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை நியமித்து திமுக கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதன் விவரம்:
 எஸ்.பி. சிவக்குமார் (புதுவை வடக்கு மாநில திமுக அமைப்பாளர்), இரா. சிவா எம்.எல்.ஏ. (புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர்), சி.பி. திருநாவுக்கரசு (புதுவை வடக்கு மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ஜூபிடர் சுப்ரமணியன் (தலைமைக் கழக நிர்வாகி), வி.எ.அனிபால் கென்னடி (புதுவை தெற்கு மாநில துணை அமைப்பாளர்), செ.நடராஜன் (நெல்லித்தோப்பு தொகுதி செயலர்), பூ. மூர்த்தி (முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com