மாணவிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

பிரதமர் மாத்ருவந்தன யோஜனா திட்டத்தின் கீழ், பள்ளி மாணவிகளிடம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமர் மாத்ருவந்தன யோஜனா திட்டத்தின் கீழ், பள்ளி மாணவிகளிடம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ரெட்டியார்பாளையம் பவழ நகர் அங்கன்வாடி மையம் சார்பில், கடந்த மார்ச் 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ரெட்டியார்பாளையத்தில் உள்ள வேளாங்கண்ணி உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 இதில், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் உடல் நலக் குறைவு குறித்து தெரிவித்து, அவ்வாறு ஏற்படாமல் தடுக்க என்னென்ன ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், அவை எந்தெந்த காய்கறிகளில் அதிகம் உள்ளன என்று விளக்கப்பட்டது. மேலும், சுத்தமான உடைகளை அணிவதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர் சாந்தா செய்திருந்தார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com