ஓட்டுநருக்கு கத்திக்குத்து

புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் அருகே ஓட்டுநரை கத்தியால் குத்தியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுவை மாநிலம், நெட்டப்பாக்கம் அருகே ஓட்டுநரை கத்தியால் குத்தியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் தமிழரசன் (26), ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது. இந்த நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணிடம் தவறான தொடர்பு வைத்திருந்தாராம்.
 இதனை அப்பெண்ணின் அக்காள் கணவரும், பாக்கம் கூட்டுச் சாலையைச் சேர்ந்தவருமான மணவாளன் கண்டித்தார். ஆனாலும் தமிழரசன் தவறான தொடர்பைக் கைவிடவில்லையாம்.
 இந்தநிலையில், திங்கள்கிழமை மாலை தமிழரசன், மணவாளனின் மைத்துனியிடம் கரியமாணிக்கம் - மடுகரை சாலை பாலாஜி நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மணவாளன், தமிழரசனைக் கண்டித்துள்ளார்.
 இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணவாளன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழரசனை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
 காயமடைந்த தமிழரசன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, மணவாளனைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com