நாளை பாவேந்தர் இலக்கியத் திங்கள் விழா

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை நிறுவனரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா "அன்னையர் பெருமையும், பாவேந்தரும்' என்ற தலைப்பில் புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் மே 5- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவுக்கு நான் (கோ.பாரதி) தலைமை வகிக்க, தமிழ்மாமணி மன்னர் மன்னன் முன்னிலை வகிக்கிறார். இதில் பாரதிதாசனின் கவிதை வரியான "உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டு முரசே' என்ற தலைப்பில் கவிஞர்களின் சிறப்புக் கவியரங்கம் நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com