அரசு பொறியியல் கல்லூரி வளாக வேலைவாய்ப்பில் சாதனை

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாக வேலைவாய்ப்பில் சாதனை படைத்தது.

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாக வேலைவாய்ப்பில் சாதனை படைத்தது.
 நிகழ் ஆண்டு சுமார் 52 பன்னாட்டு நிறுவனங்கள், 373 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி சாதனை படைத்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, சேப்லேப், பிலிப்ஸ், வேர்ல்பூல், முருகப்பா போன்றவை வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளன.
 வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் தனஞ்செயன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி இளஞ்செழியன் ஆகியோர் வாழ்த்தினர். இந்த வேலை வாய்ப்புகள் மூலம் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமும் சராசரி வருமானம் ரூ.4 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும், தற்போது படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வளாகத் தேர்வு தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com