கல்வி ஊக்கத் தொகை பெற விரும்பும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் அமைப்பு அறிவித்துள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 2019-ஆம் ஆண்டு 6 முதல் 9-ஆம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. ஆயிரம் ஊக்கத் தொகையும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள், புதுச்சேரி கிளை அலுவலகத்தில் காலை 10 முதல் பகல் ஒரு மணி வரையிலும், மாலை 7 முதல் இரவு 8 மணி வரையிலும் வழங்கப்படும்.
2019-ஆம் ஆண்டுக்கான சந்தா செலுத்தியிருக்க வேண்டும். கல்வி உதவித் தொகை பெற விரும்புபவர்கள் வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99944 93950, 2224411 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.