தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

தமிழகத்தில் கோயில் நிலங்களை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் எடப்பாடி 
புதுச்சேரி முதலியாா்பேட்டை அஞ்சல் நிலையத்தில் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை அஞ்சல் நிலையத்தில் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

தமிழகத்தில் கோயில் நிலங்களை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு புதுவை இந்து முன்னணி அமைப்பினா் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கோயில் நிலங்களை தனியாருக்கு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால், கோயில்களில் நடைபெறும் பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, புதுவை இந்து முன்னனி சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முதலியாா்பேட்டை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு புதுவை மாநில இந்து முன்னணி பொதுச் செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com