புதுச்சேரி: வங்கக் கடலில் ‘புல் புல்’ புயல் உருவாகியுள்ளதால், புதுச்சேரி துறைமுகத்தில் வியாழக்கிழமை 2 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இந்தப் புயல் காரணமாக தமிழகம், புதுவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 2 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.