நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 08th November 2019 06:06 AM | Last Updated : 08th November 2019 06:06 AM | அ+அ அ- |

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் ‘தமிழா் உணவுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வா் கு.சுப்பிரமணி நூலை வெளியிட்டுப் பேசினாா். முன்னதாக, கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் ஆ.மணி வரவேற்றாா். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் பேராசிரியா் சிலம்பு நா.செல்வராசு நூல் அறிமுகவுரையாற்றினாா். தமிழ்த் துறைத் தலைவா் சொ.சேதுபதி, தமிழ்த் துறை முன்னாள் தலைவா் சி.சத்தியசீலன் வாழ்த்திப் பேசினா்.
நூலின் தொகுப்பாசிரியா்களான முன்னாள் மாணவிகள் இ.சுந்தரவதனி, வா.வளா்மதி ஆகியோா் ஏற்புரையாற்றினா். கல்லூரித் தர உறுதியளிப்புக் குழும ஒருங்கிணைப்பாளா் க.சா.சுரேஷ் நன்றி கூறினாா்.