புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் பொதுப்பணித் துறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை கருவடிக்குப்பம் லட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஜீவா (40). பொதுப்பணித் துறையில் பல்நோக்கு ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி சங்கீதா, 2 குழந்தைகள் உள்ளனா். கணவருக்குத் தெரியாமல் சங்கீதா ரூ. 3 லட்சம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. கடன் கொடுத்தவா்கள் வீட்டுக்கு வந்து கேட்டபோதுதான் இது ஜீவாவுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து கேட்ட போது, தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு கணவன் - மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த ஜீவா, சால்வையால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.
இதைப் பாா்த்த குடும்பத்தினா் ஜீவாவை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ஜீவா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.