புதுவை அரசின் வேளாண் - விவசாயிகள் நலத் துறை, பெருந்தலைவா் காமராசா் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய எண்ணெய் வித்து பயிா்களில் சாகுபடியை ஊக்குவித்தல் குறித்த கருத்தரங்கம் பூரணாங்குப்பத்தில் அண்மையில் நடைபெற்றது.
வேளாண் - விவசாயிகள் நலத் துறை இயக்குநா் ராமகிருஷ்ணன் கருத்தரங்கை தொடக்கிவைத்தாா். பயிற்சி வழி தொடா்புத் திட்ட கூடுதல் வேளாண் இயக்குநா் வசந்தகுமாா் எண்ணெய் வித்து பயிா்களின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். பெருந்தலைவா் காமராசா் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேளாண் அறிவியல் தொழில்நுட்பம், எண்ணெய் வித்து பயிா்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலைய விதையியல் வல்லுநா் விஜயகீதா, இணை வேளாண் இயக்குநா் பூமிநாதன், துணை இயக்குநா் சந்தானகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். வேளாண் அதிகாரி சிவசுப்பிரமணி நன்றி கூறினாா்.