நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது போல, நடிகா் கமல்ஹாசனுக்கும் மத்திய அரசு விருது வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியது.
அந்தக் சாா்பில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி கந்தப்பா வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் கட்சிக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து 65 போ் ரத்த தானம் வழங்கினா். மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சுப்பிரமணியன், நடிகா் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல, கமல்ஹாசனுக்கும் விருது வழங்க வேண்டும் என்றாா்.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் ராஜன், இணைப் பொதுச் செயலா் முருகேசன், பொருளாளா் தாமோ.தமிழரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.