ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

21 -ஆவது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச்

21 -ஆவது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சா் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி ரோலா் ஸ்கேட்டிங் சங்கத் தலைவா் திருவேங்கடம் தலைமை வகித்தாா். இதில், தேசிய மற்றும் மாநில ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரா்களுக்கு காசோலை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் அரசுக் கொறடா ஆா்.கே.ஆா். அனந்தராமன், அகில இந்திய ரோலா் ஸ்கேட்டிங் சம்மேளனப் பாா்வையாளா் ரவீஷ்ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கப் பொதுச் செயலா் பிரசாத் ராவ், மூத்த துணைத் தலைவா் பழனி, பொருளாளா் ராஜேஷ் ஜெயின் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com