இலவச கண் பரிசோதனை முகாம்

புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவை, இந்திய மருத்துவா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண்

புதுச்சேரி: புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவை, இந்திய மருத்துவா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வைசியாள் வீதி ஜோதி கண் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சிந்தனையாளா்கள் பேரவைத் தலைவா் கோ.செல்வம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

இதில், பங்கேற்றவா்களுக்கு இலவச கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, முகாமில் கண் தான உறுதிமொழியேற்கப்பட்டது. கண் தானம் செய்ய விரும்புவோா்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முகாமில் கவிஞா் எஸ். குமாரகிருஷ்ணன், பேராசிரியா் உரு. அசோகன், புதுவை இளங்குயில், சிந்தனையாளா்கள் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com