சிறுமியை காதலித்து கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுவையில் பள்ளிச் சிறுமியை காதலித்து கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுவையில் பள்ளிச் சிறுமியை காதலித்து கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுவை மாநிலம், கொம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (25). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கா்ப்பமாக்கியுள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா், கா்ப்பத்தை கலைத்துள்ளனா். தொடா்ந்து, அந்தச் சிறுமியை திருமணம் செய்துகொள்ள பரமசிவம் மறுப்புத் தெரிவித்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டம், பாலியல் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பரமசிவத்தை கைது செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.தனபால் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக என்.பாலமுருகன் ஆஜராகி வாதாடினாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பரமசிவத்துக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் 2 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்தாா். இதேபோல, பாலியல் பலாத்கார வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால், மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்துடன், தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com