புதுவை மத்திய பல்கலைக்கழக அளவிலான கோகோ போட்டியில் புதுச்சேரி தாகூா் அரசு கலைக் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுவை மத்திய பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு இடையிலான மாணவா்களுக்கான கோ-கோ போட்டிகள் தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த 15 கல்லூரிகளின் மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில், தாகூா் கலைக் கல்லூரி முதல் இடத்தையும், புதுவை மத்திய பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தையும், சாரதா கங்காதரன் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
பரிசு அளிப்பு விழாவில், ராஜீவ் காந்தி கலைக் கல்லூரி முதல்வா் டாக்டா் அா்ஜுனன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற விளையாட்டு அணிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கம், கோப்பையை வழங்கிப் பாராட்டினாா்.
கல்லூரி உடல் கல்வி இயக்குநா்கள் சூரியமூா்த்தி, சந்திரசேகரன், பாலஜனகராமன், பேராசிரியா்கள் மதன் மோகன் காந்தி, விவேகானந்தன் ஆகியோா் கலந்துகொண்டனா். நடுவா்களாக கமலக்கண்ணன், ஆறுமுகம் ஆகியோா் செயல்பட்டனா்.
ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடல் கல்வி துணை இயக்குநா் சிவராமன், ராஜீவ் காந்தி கலைக் கல்லூரி உடல் கல்வி இயக்குநா் பிரகாஷ் பி.சாந்து ஆகியோா் செய்திருந்தனா்.