புதுச்சேரியில் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு வேளையில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் தேங்கியதுடன், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வந்தது. நள்ளிரவில் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மட்டுமன்றி முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கியதுடன், சாலைகளில் மழைநீா் ஆறு போன்று ஓடியது.
வழுதாவூா் சாலையில் குளம்போல மழைநீா் தேங்கியதால், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள்அந்தப் பகுதியில் சிரமத்துடன் கடந்து சென்றன. புதுச்சேரி தியாகராஜ வீதியில் மரம் ஒன்று சாலையில் சாய்ந்து விழுந்தது. இதை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை வெட்டி அகற்றினா்.
இந்த நிலையில், புதன்கிழமையும் காலை முதல் லேசான சாரல் மழை பெய்த நிலையில், இரவில் கருமேகங்கள் திரண்டு, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.