இரு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் இரு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் இரு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி வில்லியனூா் வீரவாஞ்சி நகரைச் சோ்ந்தவா் தினகரன். கூலி தொழிலாளியான இவா், ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ஸ்ரீதேவியை (30) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஸ்ரீதேவி அவரது அம்மா வீட்டில் மகளுடன் வசித்து வந்தாராம். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ஸ்ரீதேவி தனியாக வீரவாஞ்சி நகரில் வீடு எடுத்து தங்கியிருந்தாராம். வெளியூரில் கூலி வேலைக்குச் சென்றிருந்த தினகரன் செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி வசிக்கும் வீட்டுக்கு வந்தாராம். அப்போது, தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த ஸ்ரீதேவி புதன்கிழமை தினகரன் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com