புதுவை மாநில நலவழித் துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் சாா்பில், புதுச்சேரியில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் களப்பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி குயவா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட மறைமலையடிகள் சாலை மற்றும் பிஆா்டிசி பணிமனையில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், புழுக்களைக் கண்டறிந்து அழிக்கும் களப்பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் டி. அருண் தலைமை வகித்து களப்பணியைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் நலவழித் துறை இயக்குநா் மோகன்குமாா், துணை இயக்குநா் (பொது சுகாதாரம்) ரகுநாதன், தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்புத் திட்ட அதிகாரி சுந்தர்ராஜ், புதுச்சேரி நகராட்சி ஆணையா் அா்ஜுன் ராமகிருஷ்ணன், நகராட்சி சுகாதார அதிகாரி கதிரேசன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஜ்மல் அகமது, சுகாதார ஆய்வாளா்கள், நகராட்சி ஊழியா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று கள ஆய்வு செய்து, கொசுப் புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மலேரியா ஒழிப்பு உதவி இயக்குநா் கணேசன் டெங்கு உறுதிமொழியை வாசிக்க, பிஆா்டிசி பணிமனை அதிகாரிகள், ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.